தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
60

வடகிழக்கு பருவமழை காலமான சமயம் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேலும் ஒருசில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் பனி மூட்டம் நிகழ்ந்து வருவதால் நாளை மறுதினம் முதல் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், நாளை மறுதினம் ஒரு நாள் மட்டும் அவ்வாறு வறண்ட வானிலை இருக்கும் எனவும், அதற்கு மறுநாள் மறுபடியும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அந்த இடத்தில் மாதம் 8ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கன மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மற்ற மாவட்டங்களில் ஓடிடு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இதற்கிடையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரை யோரத்தில் நிலைகொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.