நாளை மழை பெய்ய இருக்கும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
141

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது சென்ற அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழைபெய்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எந்த மதத்திலும் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதனடிப்படையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதன் பொருள் மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான வகைகள் பலகாரங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது.அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே நாளை காலை கடையை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது புயல் உருவாவதற்கு ஜாவித் என்று பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை திருநெல்வேலி விருதுநகர் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி, சேலம், கோயமுத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசான மழையும், வரும் திங்கள்கிழமை திண்டுக்கல் தேனி திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் மீனவர்களை இந்திய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

நேற்று 8:30 யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு பகுதியில் குடுமியான்மலை, நாகப்பட்டினம், சூரங்குடி, காரைக்குடி, போடிநாயக்கனூர், விராலிமலை, குன்னூர் பீடோ, மணமேல்குடி, பேராவூரணி, ஆண்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், சோத்துப்பாறை பர்லியார் உள்ளிட்ட பகுதியில் 3 சென்டிமீட்டர் மறையும் ஆவுடையார்கோவில் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு சென்டிமீட்டர் மழையும், ஈரோடு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஈச்சன் விடுதி உள்ளிட்ட பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது.