இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
88

ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் இருக்கின்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர், ஓதுவார், கணினி இயக்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 1-7-2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பணியிட விவரங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர் அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ராயப்பேட்டை சென்னை 14 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ் நகல், ஜாதி சான்று நகல், குடும்ப அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல், சுய விலாசமிட்ட ரூபாய் 25 காண தபால் தலையுடன் கூடிய உறை உள்ளிட்டவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17-11-2022 அன்று மாலை 5 45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.