திமுக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது திமுகவிற்காக பரப்புரை செய்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து கொண்ட நிலையில் துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் 2026 ஆம் தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு அதற்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீதம் புது வாக்காளர்களை திமுகவிற்குகாக கண்டிப்பாக சேர்க்க வேண்டும். திமுக வழங்கும் திட்டங்களை பொதுமக்களிடம் பொறுமையாக விளக்கி உறுப்பினர்களாக சேர்ப்பது அவசியம். 30 சதவீதம் புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக 4 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.