விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

Photo of author

By Madhu

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

Madhu

தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்மை பொறியியல் துறை குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயக்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் உயர் அழுத்த தெளிப்பான் பொருத்தப்பட்டு மருந்துகள் தெளிக்கலாம் எனவும் அறிவித்தது.தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யும் நிலையில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மானியங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாக கொண்ட திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது.

அந்த வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக 2,525 கிராம ஊராட்சிகளில் விவசாய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றார்கள். இவர்களுக்கு பயிர் கடன், கால்நடைகள் கடன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 81 லட்சம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் விவசாயிகளை இயற்கை சீற்றம் ஒருவகையில் பாதிப்படையை செய்தால் மற்றொரு பக்கம் பூச்சிகளால் விவசாயம் பாதிப்படைந்து இழப்பீடு சந்திக்கும் நிலை உருவாகி வருகின்றது. தமிழகத்தில் தென்னை மர உற்பத்தி வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் தென்னை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தேங்காய் மற்றும் அதன் பிறப்பொற்களின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகள் தென்னை உற்பத்தியில் மிக முக்கிய இடங்களாக திகழ்ந்து வருகின்றது.

தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சிகளை கொள்வதற்காக உயர் மின்னழுத்த தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தலாம். இந்த இயந்திரமானது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உட்பட 20 இடங்களில் வேளாண்மை பொறியியல் துறையிடம் இருப்பதால் இ -வாடகை கைபேசி செயின் மூலம் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 450 ரூபாய் வாடகையாக பெறப்படுகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.