அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

0
74

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்தில் சமுதாய கூடத்தில் செயல்படும் நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தார். இதில் அமைச்சருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அந்த விதத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அதன்பிறகு 139வது வார்டு வடிவேல் பிரதான சாலையில் இருக்கின்ற சமுதாய நலக்கூடத்தில் செயல்படும் நோய்த்தொற்று முதல்கட்ட உடற்பயிற்சி இணையத்திலும் ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகு 128வது வார்டு வேம்புலிஅம்மன் கோவில் தெருவில் இருக்கின்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை சந்தித்து அவர்களிடம் அவர்களுடைய உடல்நிலை தொடர்பாக விசாரணை செய்து இருக்கிறார்.