42 கோடியை கடந்த உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு!

0
61

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இந்த நோய்த்தொற்று தற்சமயம் 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் கூட இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளிடையே மிக தீவிரமாக பரவி வருகிறது.இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் நல்ல நல்ல இந்த நோய் தொற்று குறைந்து வருகிறது .

அதிலும் தமிழகத்தில் வெகுவாக இந்த நோய்த்தொற்று குறைந்து வருகிறது. அதற்கு காரணம் தடுப்பூசி செலுத்தப்பட்டது தான் என்றும் சொல்லப்படுகிறது. 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற மிகப்பெரிய .இலக்கை நோக்கி தமிழக அரசு முன்னேறி வருகிறது..

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 48,95,48,722 என்று அதிகரித்திருக்கிறது இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 5,89,73,931 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 42,44,4,281பேர் குணமடைந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரையில் 61,70,510பேர் பலியாகியிருக்கிறார்கள்.