காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

0
105
Councilor's daughter married for love! Asylum in the police!
Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் அன்பாகப் பேசுவது போல் பேசி பின்னாளில் அந்த திருமணத்தை எப்படி பிரிப்பது என்று தான் பார்க்கின்றனர். பண பலம் மிக்கவர்களோ அதை ஆரம்பத்திலேயே செய்துவிடுகின்றனர்.

உப்பள்ளியில் முன்னாள் பாரதிய ஜனதா கவுன்சிலர் ராஜண்ணா கார்வி. இவர் வீட்டிலும் அப்படி ஒன்று நடந்துள்ளது. இவரின் மோனல் கார்வி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விஷயம் அந்தப்பகுதி முன்னாள் கவுன்சிலரான ராஜண்ணாவிற்கு தெரியவரவே, அவர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணமும் முடித்து விட்டனர். தற்போது தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி நேற்று முன்தினம் மாலையில் உப்பள்ளியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து உள்ளனர். அவர்கள் கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தனர். அந்த மனுவை வாங்கி கொண்ட போலீசார் பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி அளித்தனர். முன்னாள் கவுன்சிலர் மகள் வீட்டை விட்டு ஓடி, திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.