இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!

0
82

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடுர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அந்த சமூகத்திற்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தைத் தேர்வு செய்து அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும் இருக்கின்ற தத்துவ ஞானிகள், கவிஞர்கள் என்று எல்லோரும் மனித குலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கே இறந்த உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய இதுபோன்று வழக்கு தொடரப் படுவது வேதனையை தருகிறது. சாதி பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒற்றுமை இல்லாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இதுபோன்று விவகாரத்தில் பொருளாதார நிலையும், கருத்தில் கொள்ளப்படுகிறது. இறந்தவனுக்கு சொந்த நிலம் இருக்கிறதா? சொந்த நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. என்றெல்லாம் கணக்கிடப்படுகிறது. ஆனால் காலம், காலமாக பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள், சாதியினருக்கு உடலை அடக்கம் செய்வதற்கு சொந்த நிலம் இல்லை. இவர்கள் இருந்தால் உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலம் வழியாக உடலை கூட எடுத்து செல்ல முடியவில்லை.

இந்த வழக்கிலும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மயானம் இல்லை என்று முறையிட படுகிறது. ஆனால் சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும், தமிழ்நாட்டில் மயானங்களில் இருக்கின்ற சாதி பெயர் பலகைகளை தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான மையத்தை ஏற்படுத்த வேண்டும், இந்த பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைத்து சாதியினருக்கும் பொதுமக்களை பயன்படுத்த உரிமை இருக்கிறது மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கி அதன் மூலமாக இதுபோன்ற புதுமையான முறையை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும், இந்த வழக்கில் மனுதாரர் கிராமத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் பொது மயானத்தை அமைக்க உரிய இடத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார்