இந்த ராசிக்கு இன்று பொன் பொருள் வாங்குவார்கள்! இன்றைய ராசி பலன் 08-10-2020 Today Rasi Palan 08-10-2020

0
68

இன்றைய ராசி பலன்- 08-10-2020

நாள் : 08-10-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 22, வியாழக்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்: 

  மதியம் 01.30 முதல் 03.00 வரை

 எம கண்டம்: 

காலை 06.00 முதல் 07.30 வரை

 குளிகன்: 

 காலை 09.00 முதல் 10.30 வரை

திதி: 

சஷ்டி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

நட்சத்திரம்: 

 மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 10.50 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2, ஜீவன் – 1/2.

சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று துணிச்சலுடன் செயல்பட்டு காரியத்தை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் பேராதரவு கிட்டும். கல்யாண பேச்சுகளில் இருந்து வந்த தடை அகலும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று உடல் நிலையில் சில பாதிப்புகள் வர கூடும். உறவினர்கள் உங்களுக்கு உதவ முன்வர தயங்குவர். வேலை பார்க்கும் இடத்தில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள் நன்மை கிட்டும். ஓரளவு பணவரவு வரும். தேவைகள் பூர்த்தி ஆகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வெளிப்பயணம் செல்லும் காரியம் வெற்றி பெறும். வருமானம் பெறுக வாய்ப்பு உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்கும் நிலை வரும். சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கி நிற்கும். சுப காரியங்கள் கைகூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று வேலையில் மன அழுத்தம் உண்டாகி நெருக்கடி ஏற்படும். இன்று நிதானத்தை கடைபிடித்தால் மிகவும் நல்லது. வீண் செலவுகளை குறைத்து கொல்லுங்கள். வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் பொழுது நற்பலன் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். வாய்பேச்சை குறைத்து கொள்ளவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று வியாபாரம் ரீதியாக பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கல்யாணம் சுபமுயற்சிகளில் உயர்வு ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதம் இல்லாமல் கிடைக்கும். உங்களுடைய நண்பர்கள் ஆதரவாக உதவி செய்வார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவு உண்டாகும். உற்றார் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து மகிழ்ச்சி பெருகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று வீட்டில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் பெருமை சேர்க்கும் படி நடந்து கொள்வார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் இருந்த வந்த பிரச்சினைகள் சுலபமாக முடியும். கடன்கள் பிரச்சினை தீரும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உங்களுடைய மனக்குழப்பம் அதிகரித்து காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோவப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு காலை 09.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அமைதியாக போவது நல்லது. உடல் தொடர்பாக இருந்த வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுடைய அனைத்து நல்ல காரியம் கூட தாமதமாகி முடியும். அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் ராசிக்கு காலை 09.47 க்கு மேல் சந்திராஷ்டமம் வருவதால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செய்யுங்கள். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று குழந்தைகள் மூலம் பெருமையான மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி நெருக்கம் அதிகரிக்கும். வேலை பார்க்கும் இருந்த வந்த பிரச்சினைகள் அகலும். பொன் பொருள் வாங்கி குவிப்பீர்கள். . தொழில் ரீதியான வெளி ஆட்களின் நட்பு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்கள் வீடு தேடி சந்தோசமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் நல்ல உதவி கிடைக்கும். ஆடை ஆபரணம் பொருள் வாங்கி குவிப்பார்கள். கல்யாணப்பேச்சு முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் . சேமிப்பு உயரும் வாய்ப்பு உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.

 

 

author avatar
Kowsalya