மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் இருந்து நான்கு சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பொதுவாக டிஏ மற்றும் டி ஆர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்படும்.
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த முறையானது அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் ஜனவரி சுழற்சிக்கான அகவிலை படி அடுத்த ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவலை நிவாரணத்தை இரண்டு சதவீதம் உயர்த்தி வழங்கியது. இதன் மூலமாக அகவிலைப்படி 55 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. ஆனால் கடந்த 78 மாதங்களில் அறிவிக்கப்பட்ட அகவிலைப் படையிலேயே மிக குறைவானது கடந்த முறை அறிவிக்கப்பட்டது தான். இந்த அகவிலைப்படி குறைவாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அரசு ஊழியர்கள் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
பல இடங்களில் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வு போதாது என போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் தொகை அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலை படி தொகை கண்டிப்பாக அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. தற்போது ஜூலை மாதம் வரவுள்ளதால் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் மத்திய அரசு முன்னதாக நிலுவையில் உள்ள அகவிலை படி உயர்வுக்கான தொகையை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தொகையானது அடிப்படை ஊதியம் மற்றும் பழைய அகவிலைப்படியாக வழங்கப்படும்.