அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

Photo of author

By Madhu

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

Madhu

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி சீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதிமுக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் பொழுது தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் எம் பி சீட்டு குறித்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சதீஷ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என சதீஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தேமுதிகவுக்கு சீட்டு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது சதீஷ் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம் பி சீட் பெற வாய்ப்புள்ள சதீஷ் கடந்த 2006, 2009 மற்றும் 2014, 2019 என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.