கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

0
84

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.

 

இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி வருகிறார். இந்த லேகியத்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனர். இதை வாங்கி சென்ற மக்கள் சாப்பிட்டு கோரோனோ உடனடியாக குணமாவதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவல் எப்படியோ முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு செல்ல அவர் ஆய்வு செய்தார். ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா தயாரித்த இந்த கொரோனா தடுப்பு மருந்து உண்மையாகவே கொரோனாவை குணப்படுத்துகிறதா? வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா? என்பதை பற்றி அறிய அவர் லேகியத்தை ஐ சி எம் ஆர் குழுவிற்கு கொடுத்து பரிசோதனை செய்ய சொல்லியுள்ளார்.

 

இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும் வரையில் லேகியத்தை விநியோகிக்க வேண்டாம் என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவ குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் திருப்பதி தேவஸ்தான ஆய்வாளர்கள் அனைவரும் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கத்திரிக்காய் லேகியத்தை மக்களுக்கு கொடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் கத்திரிக்காய் சொட்டு மருந்தை கண்ணில் விட அனுமதி இல்லை என தடை விதித்தது.

 

இந்நிலையில்,ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் கொரனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும் போது மட்டுமே கத்திரிக்காய் சொட்டு மருந்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

 

author avatar
Kowsalya