பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் தள்ளுபடிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை ஜூன் 25ஆம் தேதி இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் 20 தவணையை ஒரு சிலரால் மட்டுமே பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

தற்போது வரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை எப்போது வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த eKYC செய்த நபர்களுக்கு இருபதாவது தவணை பணம் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிஎம் சம்மன் கிசான் யோஜனா திட்டத்தில்   eKYC சரி பார்ப்பதற்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அங்கு eKYC விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் ஆதார் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்

இதற்குப் பிறகு மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம் இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக eKYC சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு சரிபார்க்க முடியவில்லை என்றால் இருபதாவது தவணை பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது