தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

0
241

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் நேற்று(ஜூலை15) மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த வகையான நிறுவனங்களுக்கு எவ்வளவு ரூபாய் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தற்பொழுது உயர்ந்துள்ள மின்கட்டணம் குறித்தான விவரங்கள்…

* அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* இரயில்வே மற்றும் இராணுவ கட்டட குடியிருப்புகளுக்கும் மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* கிராமப் பஞ்சாயத்தில் உள்ள குடிசைகள் மற்றும் தாட்கோ நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 9.35 ரூபாயில் இருந்து 9.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* குடிசைத் தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6.95 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* விசைத்தறி நிறுவனங்களுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* வேளாண்மை மற்றும் அரசு விதைப் பண்ணை நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாயில் இருந்து 4.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* தொழில்துறை மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 8.70 ரூபாயில் இருந்து 9.10 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 7.65 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* அரசு கல்வி நிறுவனங்களுக்கும் மருத்தவமனைகளுக்கான மின்கட்டணம் 7.15 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* கட்டுமான பணிகளுக்கான மின்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 12.25 ரூபாயில் இருந்து 12.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.