2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தங்களது கட்சிகளை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
மேலும் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல் கட்டமாக வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை விழுப்புரம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு ஜூலை 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
ஜூலை 7ஆம் தேதி கோவை புறநகர் சட்டமன்ற தொகுதியான மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். ஜூலை எட்டாம் தேதி கோவை மாநகர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
ஜூலை பத்தாம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், ஜூலை 11ஆம் தேதி வானூர், மயிலம், செஞ்சி, ஜூலை 12ஆம் தேதி கடலூர் ,பண்ருட்டி, ஜூலை 14ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை,நன்னிலம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகள் வரை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்