புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை. பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும். பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயரை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாச்சலேஸ்வரர் கோவில் என பெயர் மாற்றுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக கோவிலின் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 1940 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியத்தரிசி பாலசுப்ரமணியானால் திருவண்ணாமலை வரலாறு என்ற நூலில் கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் இந்த கோவிலை அண்ணாமலையார் ஆலயம் எனவும் அருணாச்சலேஸ்வரர் கோவில் எனவும் அழைத்து வருகின்றனர். தற்போது கோவிலின் பெயர் மாற்றுவது குறித்து வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.