விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

Photo of author

By Madhu

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

Madhu

விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றது. அதில் ஒன்றாக பி எம் கிசான் திட்டம் அமைந்துள்ளது நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியை பெரும் வகையில் மத்திய அரசு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றது.

இந்த நிதி ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் போலி பயனாளிகள் இணைந்து பயன் பெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

அதனை கவனிக்கும் வகையில் அரசு நிர்வாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பிஎம் கிசான்  உள்ளிட்ட திட்ட பயணிகளை பெற விவசாயிகளின் தனித்துவமான அடையாள எண் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளனர். இந்த விவசாய அடையாள எண் மூலமாக வேளாண் பயிர் கடன், விவசாய இடுப்பொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள், இதர துறைகளின் உழவர் நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெற முடியும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய வருவாய் கிராமங்களிலும் முகாம்களின் மூலமாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பொது சேவை மையங்களின் மூலமாகவும் பதிவு செய்யலாம். விவசாயிகள் பதிவு மேற்கொள்ள பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன்களுடன் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம், விவசாயிகள் ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில்  கலந்துகொண்டு தங்களுடைய நில உடைமைகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவேற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.