பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Madhu

பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

Madhu

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கின்றன.ர் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்ற ஊக்குவிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் ரூபாய் நிலையான வாய்ப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்யப்படுகின்றது. பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வு தொகை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆக கிடைக்கும்.

மேலும் அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிபதனையாக அவர்கள் கூறியிருப்பதாவது குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் 1,20,000 மேல் இருக்கக் கூடாது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது அவசியம். மேலும் பெண் குழந்தைகள் 2011 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்திருப்பது அவசியம் விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், கரு தடை அறுவை சிகிச்சை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கு வட்டாட்சியர் உறுதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.