தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது மேலும் ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய திட்டங்களை பெற உதவியாக இருக்கும்.
மேலும் தமிழக முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் அதில் 26 ஆயிரத்து 618 முழு நேர கடைகளும், 10,710 பகுதி நேர கடைகளும் செயல்படுகின்றது இவற்றின் மூலம் பொருட்கள் விநியோகம் சீராக நடைபெற்று வரும் நிலையில் அதனை உறுதி செய்ய பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கைரேகை அங்கீகார வீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாக பெற்று செல்ல முடியும். ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு தற்போது மின்னணு விற்பனை கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருவியின் மூலம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்வது அவசியம். இந்த கைரேகை ஆதார் அட்டையில் உள்ள கை ரேகையுடன் பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.
முன்பிருந்த விதிகளின்படி கைரேகை 40 சதவீதம் துல்லியமாக இருந்தால் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 90% துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் விதியை மாற்றி அமைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் கைரேகை சரியாக பதிவாக விட்டால் கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்படும். இதன் மூலம் பொருட்கள் தர தாமதம் ஏற்படுகின்றது. அதனால் கூட்டுறவுத்துறை மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைத்து கைரேகை பதிவின் 90 சதவீதம் துள்ளியத்தை தற்போது 70% ஒத்துப் போனால் பொருட்கள் வழங்கும் வகையில் மாற்றியமைத்துள்ளது. அதனால் பொதுமக்கள் விரைவாக ரேஷன் பொருட்களை பெற்று செல்கின்றனர்.