தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
அதனால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவர்கள் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவராக இருந்தால் அந்த பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மீதமுள்ளவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் 72,000 இருக்க வேண்டும். அன்றாட கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவிகள் இந்த உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டு வரை உதவித்தொகை பெற தற்போதைய தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் ஆவணத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்த விதமான உதவி தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவோ, எந்த திட்டத்திலும் பயன் பெறாதவராகவோ இருக்க வேண்டும். இந்த உதவி தொகை பெறுவதற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.