ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

Photo of author

By Hasini

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

Hasini

Forced marriage for young women leaving Afghanistan! The cruelty done by the family!

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது,  ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடினர். முடிந்தால் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டனர். பெற்ற குழந்தைகளை பெற்ற தாய்மார்களே வேறு நபர்களிடம் கொடுத்து அனுப்பிய நிகழ்வுகளும் நடந்தேறின.

பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடும் நிலை ஏற்பட்டது. அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக இறுதியாக வெளியேறியதை தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து தலீபான்கள் தற்போது பெண்களுக்கு புது விதி முறைகளை வகுத்து உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஆண் துணை இல்லாத பெண்கள், பயணத்தை தடை செய்துவிட்டனர்.

அதனால் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பல பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதி உடையவர்களாக ஆக்கப்பட்டனர். என பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஐக்கிய அரபு அமீரக முகாம்களில் சிலர் தலீபான்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி தெரிவித்துள்ளது.

தப்பிக்க உதவுவதற்காக தங்கள் பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காகவும் அல்லது கணவர்களாக காட்டிக் கொள்வதற்காகவும் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் உள்ள சில ஆண்களுக்கு அந்த குடும்பங்கள் பணம் கொடுத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. பெண்கள் கடத்தலுக்கு உள்ளாகும் இதுபோன்ற நிகழ்வுகளை அடையாளம் காண அமெரிக்க தூதர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.