தமிழக அரசு சார்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்கள் தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு இலவச பஸ் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாமல் பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 வரை தினம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த டோக்கன்கள் பெசன்ட் நகர், அடையார், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், வடபழனி, கேகே நகர், ஆதம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், எஸ்டேட் அண்ணாநகர், ஆவடி,
அயனாவரம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, பாடியநல்லூர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம், திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர், ஆகிய 40 பணிமனை பஸ் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு இரண்டு புகைப்படங்களை கொடுத்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் இதில் பயன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.