தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகின்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் பிற மாநகராட்சிகளிலும் புறம்போக்கு நிலங்களில் வசிக்க கூடியவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பொறம்போக்கு பகுதியில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கு வசிக்க வேண்டும்.
அந்த இடத்தில் எந்தவித ஆட்சியபசனையும் இருக்கக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மூன்று லட்ச ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நகரப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரையில் வழங்கப்படும்.
மேலும் அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இந்த புறம்போக்கு இடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடங்களில் நீர் நிலைகளோ, கோவில் நிலமும் கால்வாய் போகும் இடமாக இருந்தால் பட்டா வழங்க முடியாது.
அங்கு வசிக்கும் மக்கள் பட்டாவிற்கு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பட்சத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.