இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

0
76

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது

ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியும். இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது, செயல்படுத்த இருக்கின்றன சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் இத்திட்டம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சோதனை அடிப்படையில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வாயிலாக இந்த பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றது.

தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் ரேஷன் கார்டின் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக் முறையில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுச் செல்லலாம்.

இதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது.

முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை சோதனை அடிப்படையில் இந்த  திட்டம் செயல்படுத்தப்படும். 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, ஈரோடு, நாகை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மாதந்தோறும் முதல் வாரத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றுவிடும் அதனால் அவர்கள் அலைய வேண்டிய தேவை இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டமானது முன்கூட்டியே ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சில நடைமுறைகள் சிக்கல்கள் இருந்தன. அதனால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்

Previous articleராமதாஸுக்கு மறைமுக ஆதரவு.. திமுக கூட்டணிக்குள் உண்டாகும் விரிசல்!! இடத்தை காலி செய்யும் திருமா!!
Next articleசட்டமன்ற தேர்தல் 2026; ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் இபிஎஸ்!