துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!

Photo of author

By Madhu

துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!

Madhu

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பது, நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் அவர் தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

வெளி மாவட்ட பயணங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைத்துக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை செய்து வருகின்றார். இந்நிலையில் அனைத்து பொதுக் கூட்டங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கலந்து கொள்கின்றார். இந்நிலையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறியது.

உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவால அதிகரித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சுகாதாரத்துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உதயநிதிக்கு கொரோனா தொற்று என வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவருக்கு காய்ச்சல் தவிர வேறு எந்த பாதிப்பும் கிடையாது. அவர் தனிமைப்படுத்தப்படவும் இல்லை. காய்ச்சல் காரணமாக மக்களை சந்திக்காமல் இருக்கின்றார் என விளக்கம் தரப்பட்டுள்ளது.