முருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!

Photo of author

By Madhu

முருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!

Madhu

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மாநாட்டு வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பாக ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாடு வளாகத்தில் ஆறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து அங்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாதிரி ஆறு படை வீடுகள் அமைக்க போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர் .அதனைத் தொடர்ந்து ஆறு படை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்த போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக முருகு பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரி ஆறுபடை வீடுகளுக்கு மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்து முன்னணி தரப்பிலிருந்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபதனைகள் போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு பைக்கில் வரக்கூடாது, வாகனங்களில் மாநாட்டுக்கு வர உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீசார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறக்கூடிய வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டு பூஜை செய்யலாம். இந்த மாநாட்டில் தமிழக மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் உள்ள மண்டலங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி பாஸ் வழங்க வேண்டும். தனித்தனி பார்க்கின் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

விஐபி மேடையில் பங்கேற்பவர்களுக்கென பார்க்கிங் வசதிகளை உருவாக்க வேண்டும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும் மாநாட்டில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்களை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும். மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள், உள்ளிட்டவை ஏற்படுத்தி தரவேண்டும். மாநாட்டு மேடை மற்றும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

பார்க்கிங்கில் நிறுத்திய வாகனங்களை தன்னார்வலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். அதனை பட்டியலிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க முறையாக சம்பந்தப்பட்ட கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்.

ரிங்கு ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 52 நிமிடங்கள் விதிக்கப்பட்டுள்ளது.