தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிக ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா அனைவரையும் ஆட்டி படைத்தது விட்டது. அதன் காரணமாகவும், தற்போது இரண்டாம் அலை வரும் என நிபுணர்கள் கூறியுள்ள கருத்தின் காரணமாகவும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் அரசு முமுரமாக இஈடுபட்டு வருகிறது.
அதே போல் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இது காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெற்றது. இந்த முகாமில் சுகாதார ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எப்போதும் அவர்களது வழக்கமான பணி நேரத்தை விட அதிக அளவு அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு சேவை செய்தனர்.
அதன் காரணமாக திங்கட்கிழமையான இன்று தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் எதுவும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.