மனைவியின் ஆயுளை கூட்ட கணவன் செய்ய வேண்டிய முக்கிய பூஜை!

0
127

தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்று மனைவியர் பலர் பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும், வழக்கம் அதேபோல மனைவிக்கு ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டுமென்று கணவன்மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் நாம் காணலாம்.

தன்னுடைய அங்கத்தில் சரிபாதியை தேவி பார்வதிக்கு கொடுத்தவர் சிவபெருமான் கணவன்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து அதன் பின்னர் அர்ச்சனை செய்வதன் மூலமாக மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்கும். இதனை மனைவி செய்தால் கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருமணம் நடைபெறும் அன்று மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஹோமம் வளர்ப்பது வழக்கம். அதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக விளங்குகிறது இந்த சிவனுக்கு இருக்கும் விரதம்.