அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்கின்றனர்.அவ்வாறு அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பள்ளிகளுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவது வழக்கமாகி வருகின்றது.
இதனால் விபத்துக்கள் ஏற்படுவதால் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரை சேர்ந்த நபர் ஒருவர் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தின் பொழுது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதை தடுப்பதற்காக பள்ளி நேரமான காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதாடினார்கள்.
அதனை கேட்ட நீதிபதிகள் மனுதாரர்கள் சொல்லுவது நடைமுறைக்கு மாறாக இருக்கிறது. பேருந்துகளில் இருக்கைகள் இருந்தாலும் தொங்கிக்கொண்டு பயணிப்பதை தான் மாணவர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரித்து மாணவர்கள் கேட்காமல் இருப்பதினால் சென்னை போன்ற நகரங்களில் மாணவர்கள் பேருந்து மேற்கூரையில் ஏறி மோதலில் ஈடுபடுகின்றனர்.
படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக அதிக அளவு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் இனி படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் மாணவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் மாணவர்கள்
பேருந்துக்குள் இருக்கை இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் இருக்கையில் இருந்தாலும் படிக்கட்டில் தான் அதிக அளவு பயணம் செய்கின்றனர், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது .
இதனை தவிர்ப்பதற்காக தற்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யாமல் நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனர் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்