வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

Photo of author

By Madhu

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

Madhu

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 36,200 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெற வீடுகளில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்கலைக்கழகம் மாநில ஆணையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை மேலும் தொடர முடியாமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி தொகை கட்டாயம் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்கள் அவசியம் தங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணாக இருக்க வேண்டும், அதேபோல பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திருக்க வேண்டும்.

தொலைதூரக் கல்வியோ அல்லது வேறு எந்த திட்டத்திலும் சேர்த்து இருக்கக் கூடாது. நேரடியாக இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு சென்று படித்தால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற முடியும். மேலும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு அண்ணன் அல்லது தம்பி யாரும் இருக்கக்கூடாது. ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது

ஒரு குடும்பத்தில் ஒரு மகள் மற்றும் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 3000 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் காலத்திற்கு 36,200 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இதன் மூலம் விடுதி மற்றும் பெற கட்டணங்கள் வழங்கப்படாது, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டப்படிப்பு, முடித்ததற்கான சான்றிதழ், முதுகலை பட்ட படிப்பிற்கான கல்வி கட்டணம், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், குடும்ப வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முதுகலை படிப்பில் சேர்ந்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி யின் இணையதளத்தில் இந்த உதவி தொகை தொடர்பாக தகவல்கள் அறிவிக்கப்படும் கடைசி தேதிக்குள் மாணவிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்