காலை வாரிய கூட்டணி கட்சி! பறிபோகிறது இம்ரான் கானின் பிரதமர் பதவி!

0
78

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன இந்த தீர்மானத்தின் மீது நாளையதினம் விவாதம் நடைபெறவிருக்கிறது இதனை தொடர்ந்து 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக கடந்த 27ஆம் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நேற்று பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் உரையாற்றிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவை காட்டும் இடத்தில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர் இந்தப் பேரணிகள் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுக்கொண்டு இம்ரான் கான் மற்றும் அவருடைய அரசை குற்றம்சாட்டி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம் கி எம் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியை தெரிவித்திருக்கிறது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கானின் அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு உண்டாகியிருக்கிறது இதனை தொடர்ந்து பெரும்பான்மையை இழந்திருப்பதால் இம்ரான்கான் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது
.

இம்ரான் கானின் கூட்டணி கட்சியின் இந்த அறிவிப்பு காரணமாக, எதிர்க்கட்சிகளின் பலன் 177 ஆக அதிகரித்தது இதனால் இம்ரான்கான் அரசின் பலம் 164 ஆக குறைந்து விட்டது.