TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசை தவெகவும், தவெகவை திமுக தொண்டர்களும் காரணம் கூறி வந்தனர். இதற்கு தீர்வு காண தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்ததை போல, பாஜக-வும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ஆனால் இது விபத்தல்ல, பாஜக திட்ட மிட்டு செய்த சதி என்றும் சிலரை கூறி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனது கொள்கை எதிர் பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறி வந்தார். தவெகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சிய பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான் திமுக விஜய்யை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் அனைவரது கவனமும் திமுக பக்கம் திரும்பியது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜக திமுகவையும், தவெகவையும் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை திசை திருப்ப தான் விஜய்யிக்கு உதவுவது போல் நடித்து 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவின் மூலம் திமுக அரசு சதி செய்ததை போல சித்தரித்து, விஜய் மேல் உள்ள தவறையும் சுட்டி காட்டி விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென திட்டம் திட்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.