மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

Photo of author

By Madhu

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

Madhu

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பக்கம் அகவிலை படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்ட 53 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதன் மூலமாக மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை  நிவாரணம் உயர்வடைந்தது. மேலும் இந்திய நாட்டின் சில்லறை விலை உயர்வு கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது 2.82 சதவீதம் ஆக குறைந்தது. உணவுப் பொருட்களின் வீழ்ச்சி குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போல ஏப்ரல் மாதத்தில் எட்டாவது ஊதிய குழுவின் விதிமுறைகள் தலைவர் நியமனம் போன்ற பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது.

ஆனால் அந்த பணிகள் எதுவும் தற்போது வரை நடைபெறாமல் உள்ளது ஜூன் மாதம் முடியும் என நினைத்த நிலையில் அதிகாரம் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசு பணியாளர்களிடையே குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அகவிலைப்படி உயர்வுகள் அனைத்தும் ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் தான் அமலுக்கு வருகிறது. அடுத்த புதிய மாற்றங்கள் மற்றும் ஊதிய நிர்ணயங்கள் எட்டாவது ஊதிய குழுவினால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.