இன்று நடக்கும் குடியரசு தலைவர் தேர்தல்! அடுத்த குடியரசுத் தலைவர் யார் பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

0
143

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கின்ற கோவிந்தன் பதவிக்காக முடிவுக்கு வருகை இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களம் காண்கிறார். அதே போல எதிர்க்கட்சியின் சார்பாக பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் நடைபெறவுள்ளது.

தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் பார்வையாளர் புவனேஷ் குமார் ஆய்வு செய்தார். அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்து திமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

நோய் தொற்று பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே போல குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அடையாறில் இருக்கின்ற தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் பாஜகவின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றுக்கொண்டு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

வாக்குப்பதிவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும் சட்டசபை உறுப்பினர்களுக்கு பிங்க் நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படும் தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற குழு கூட்ட அறையில் மறைவாக அமைக்கப்பட்டிருக்கின்ற மேஜையின் மீது வாக்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும், அங்கே வாக்குச்சீட்டு கொடுக்கப்படும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் தமிழகத்தைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வாக்களிக்க இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணைய முன் அனுமதி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், கணேச மூர்த்தி, கார்த்தி சிதம்பரம்,உள்ளிட்டோரும் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்களிக்கின்றனர். மற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் வாக்களிக்கவிருக்கிறார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாளை 4 மணி முதல் 5 மணி வரையில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பட்டி சீல் வைக்கப்பட்டு 1 மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு டெல்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.