சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

0
302

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார்.

110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் தீபக் சாஹர் பிரஷீத் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல முகமது சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சுப்மன் 82 தங்களுடனும், தவான் 81 ரன்களுடன், ஆட்டமிழக்காமலிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி சமீபத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா தன்னுடைய முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், வெற்றியைக் கண்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் ஆசிரியக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும், மொத்தவிருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த தீபக் சாகர் 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Previous articleஇசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!
Next articleசெப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here