ஜம்மு வழியாக தப்ப முயன்ற தீவிரவாதிகள்?!.. தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்!..

Photo of author

By அசோக்

ஜம்மு வழியாக தப்ப முயன்ற தீவிரவாதிகள்?!.. தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்!..

அசோக்

terrorist

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

ஒருபக்கம், பகல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த தீவிரவாதிகள் ஜம்மு வழியாக தப்பியோட முயற்சி செய்து வருவதை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். கிஷ்த்வர் மலை வழியாக அவர்கள் தப்பியோட முயற்சி செய்து வருதாக சொல்லப்படுகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இதுவரை 4 முறை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்ததாக சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்களை தீவிரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை திருடிச் சென்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.