முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

Photo of author

By Madhu

முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பிளான்; விளாசிய அமைச்சர் சேகர் பாபு!

Madhu

இந்து முன்னணி சார்பாக மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருக்கின்றது. இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏடி இளங்கோவன் இது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீமான் தமிழில் இந்த குடமுழக்கை நடத்த வேண்டும் என கூற தமிழிலும் ஓதப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் முருகனை வைத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றது. இந்நிலையில் பவன் கல்யாண் யோகி ஆதித்யநாத் இந்து முன்னணி சார்பில் 22 ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தமிழ்நாட்டிற்கு என்ன சம்பந்தம்.

எந்த காலத்திற்கும் இல்லாத அளவில் 117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு இந்த ஆட்சியில் நடத்தி இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நாங்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யவில்லை.

ஆனால் பாஜக முருகன் மாநாடு என கடவுளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இந்த மாநாடு தேவையற்ற மாநாடு முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறார்களா.

முதல்வர் ஸ்டாலின் பக்தியில் தான் தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு பாஜக மாநில தலைவர் நாயனார் ஏன் ஆந்திராவில் இருப்பவர்களுக்கு உத்திர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கும் முருகனை வழிபடக் கூடாதா பவன் கல்யாண் முருக பக்தர்கள் பலமுறை அவர் முருகனின் ஆறுபடை வீட்டிற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர் முருக மாநாட்டிற்கு வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பேசி இருக்கிறார்.