சமந்தாவின் சபதம் கலைக்கப்பட்டதா!! இரண்டாவது முறை காதலில் விழுந்த நடிகை!!

Photo of author

By Gayathri

சமந்தாவின் சபதம் கலைக்கப்பட்டதா!! இரண்டாவது முறை காதலில் விழுந்த நடிகை!!

Gayathri

Is Samantha's Vow Dissolved!! The actress fell in love for the second time!!

நடிகை சமந்தா அவர்களுக்கும் நாக சைதன்யா அவர்களுக்கும் காதல் திருமணம் நடந்து அதன் பின் இருவரும் விவாகரத்து பெற்று தற்பொழுது நாகசாய் தனியாக அவர்கள் சோபித்த துலிபலாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

நடிகை சமந்தாவோ நான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இல்லை என்றும் என் வாழ்வில் இனி நான் மட்டும்தான் இன்றும் சபதம் எடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தன்னுடைய உடல்நிலை மோசமாக இருந்த பொழுதிலும் அதனை தனியாகவே இருந்து சரி செய்து கொண்டதாகவும் பல பேட்டிகளில் அவர் தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட நடிகை சமந்தா அவர்கள் தற்பொழுது மீண்டும் காதல் வயப்பட்டு இருப்பது போன்ற போட்டோக்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஆனால் இந்த போட்டோ மற்றும் வீடியோ குறித்த இந்த கேள்விகளுக்கும் நடிகை சமந்தா அவர்கள் பதில் அளிக்கவில்லை.

அதாவது சிட்டாடல் வெப் சீரிஸ் இன் இயக்குனரான ராஜ் நிதிமோருடன் அடிக்கடி நடிகை சமந்தா அவர்கள் வெளியில் பயணம் செய்வது இருவரும் இணைந்து நடனம் ஆடுவது மற்றும் கைகளை கோர்த்தபடி சுற்றி தெரிவது போன்ற போட்டோக்கள் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து நடிகை சமந்தா அவர்கள் எந்த பதிலும் அளிக்காததாலும் இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து இருப்பதாலும் நடிகை சமந்தா அவர்கள் இரண்டாவதாக சிட்டாடல் தொடரின் இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.