இபிஎஸ் செங்கோட்டையனை விமர்சிக்கததற்கு காரணம் இது தானா.. பயத்தில் அதிமுக!!

0
89
Is this the reason why EPS did not criticize Sengottaiyan.. AIADMK is afraid!!
Is this the reason why EPS did not criticize Sengottaiyan.. AIADMK is afraid!!

ADMK TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இன்னும் 2 வருடங்கள் கூட பூர்த்தி அடையவில்லை. அதற்குள் இந்த கட்சிக்கு திராவிட கட்சிகளுக்கு இணையாக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால் தவெகவுக்கான வரவேற்பு திமுகவை மிகவும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது அதிமுகவிற்கு யூடர்ன் அடித்து விட்டது. மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அதிமுக பலமிழந்து காணப்படுகிறது. இதற்கு காரணமாக பலரும் பல்வேறு விசியத்தை கூறுகின்றனர். அதிமுகவின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் சமயத்தில் இதனை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இபிஎஸ்க்கு எதிராக நால்வர் அணி உருவானது, பிறகு நால்வர் அணியிலிருந்து பிரிந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது போன்றவை அதற்கு உதாரணங்களாக பார்க்கப்படுகிறது. அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வில்லை என்றாலும், அதன் எதிர் கட்சி அந்தஸ்த்தை தக்க வைக்க அதற்கு பலமான கூட்டணி தேவை. இதன் காரணமாக தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்தது. ஆனால் பாஜகவும் கூட்டணிக்குள் இருந்தே தனது சித்து வேளையே காட்டி வருவதால் பாஜகவை நம்ப முடியாது என்பதை உணர்ந்த இபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க முயன்றார். இதுவும் நிறைவேறாமல் போனது. இதனால் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யை நேரடியாகவே விமர்சித்து வந்தனர். ஆனால் இபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்தது இல்லை.

அப்படி விஜய்யை விமர்சித்தால் அதிமுக மீது விஜய்க்கு கோபம் அதிகமாகி விடுமோ என்ற பயத்தினால் தான் என்ற கருத்தும் வலுப்பெற்றது. இந்நிலையில் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்தே, அவரை கடுமையாக விமர்சித்து வந்த இபிஎஸ், அவர் தவெகவில் இணைந்தது குறித்து கேட்ட போது, செங்கோட்டையன் அதிமுக கட்சியே இல்லை. கட்சியில் இல்லாதவர்களை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், செங்கோட்டையன் விஜய்யுடன் இருக்கும் நிலையில் அவரை விமர்ச்சித்தால் அது தவெக அதிமுக கூட்டணிக்கு வரவிடாமல் அவர் தடுத்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

Previous articleதிராவிட கட்சி பிளவுற காரணம் தேசிய கட்சியா.. வெளியான திடுக்கிடும் தகவல்!!
Next articleஇரண்டும் ஒன்று தான்.. செங்கோட்டையன் கருத்தால் கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்!!