ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

Photo of author

By Madhu

ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

Madhu

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் மிக எளிய முறையில் விண்ணப்பித்து என் ஓ சி பெரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு கூறுகையில் simpleGov  முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்த இருக்கின்றன, அடையாளச் சான்றிதழ் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றது..

அரசு ஊழியர்கள் விரிவான முறையில் ஆவணங்களை சேகரித்து சமர்ப்பிப்பது சவாலான ஒன்றாக உள்ள நிலையில் ஆவணங்கள் ஒவ்வொன்றும் பெறுவதற்கான நடவடிக்கையில் படிநிலையில் தாமதமாகி வருகின்றது.

துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பிரச்சனைகள் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்று பெறுவதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு என்பது அவசியம் தேவைப்படுகின்றது. போதிய தகவல் பகிர்வு இல்லாதது , ஒத்துழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சான்று பெறுவது காலதாமதம் ஆகும்.

அதிகப்படியான ஆவணங்களை கையாளும் வகையில் தள்ளிவிடப்படுகின்றது இதனால் வாய்ப்புகள் தவற விடுதல், பொறியியல், மருத்துவம் அளித்த பல்வேறு துறைகளைச் சார்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், சர்வதேச கருத்தரங்கங்கள் சர்வதேச அறிவு மையங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பாஸ்போர்ட் பெரும் நடைமுறைகளில் அதிக சிக்கல் இருப்பதால்தான் வாய்ப்புகளை தவற விட்டு வருவதாக கூறப்படுகின்றது. தனிப்பட்ட பயணங்கள் மற்றும் குடும்பமாக வெளிநாடு பயணிக்க திட்டமிடும்பொழுது அதில் ஒருவர் அரசு ஊழியராக இருந்தால் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் போதிய அனுமதிச்சான்ற பெறுவதில் நிலவும் சிரமங்கள், காலதாமதம் ஆகுவதால் பயணங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் தமிழக அரசு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரை செய்தது.

மேலும் அவசரகால நடவடிக்கையாக விவரங்கள் தேவைப்படும் சூழலில் துறை தலைமையே என்ஓசி அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கையில்  ஈடுபடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று விதிகளில் திருத்தம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.