தமிழ்நாட்டின் இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

0
100

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது..

வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி ,தேனி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வரும் 19ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். அதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்குமெனவும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.