கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்

0
139

தென்காசி:

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்வில் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் கே.முரளி , நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சேக் தாவூத் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரூர் செயலாளர் இலியாஸ், வடகரை பேரூர் கழக திமுக செயலாளர் தங்கப்பா, திமுக பேரூர் கழக பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Previous articleஅடக்கமில்லா அடைக்கலமணி.! மது போதையில் பெண் காவலரை திட்டியதால் திமுக உடன்பிறப்பு மீது வழக்குப்பதிவு!
Next articleவடகரை மயான பூமியை சீர்படுத்தி தர சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கரிடம் கோரிக்கை