கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

Photo of author

By Madhu

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

Madhu

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர்களுக்கு தொகை கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் மீண்டும் மகளிருக்கு வாய்ப்பளிக்க திமுக அரசு முடிவு செய்தது.

மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும், குடும்பத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் இருக்கக்கூடாது. எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் மற்றும் மேயர், ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில் செய்து தொழில் வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த தொகையை பெற முடியாது..

கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது அதனால் தகுதியான மகளிர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தகுதியான நபர்கள் சரியான மொபைல் எண், வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும்.

ஜூலை 15ஆம் தேதி முதல் நடக்கும் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.