ரஜினியுடன் மீண்டும் இனைகிறாரா? மனம் திறந்த இயக்குனர்!

0
202

நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார். அவருடைய திறமையை வைத்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பேட்டை திரைப்படத்தின் மூலமாக பெற்றார். கார்த்திக் சுப்புராஜ் அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை எடுத்து முடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி இணையதளத்தில் வெளியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இதற்கு நடுவில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் அது தொடர்பான தகவலை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

நான் அந்த செய்திகளை கவனித்து வருகின்றேன் நான் ரஜினி சாருடன் மறுபடியும் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் மற்றும் துரு விக்ரம் நடிப்பில் விக்ரம் நடிக்கும் 60வது திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

Previous article15 வருடத்திற்கு முன்னால் நடந்த தவறுக்கு இப்போது வருத்தப்படும் நடிகை!
Next articleநான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here