Breaking News, Politics, State

கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.. விஜய்யை வைகோ நேரடி விமர்சனம்!!

Photo of author

Author name

MDMK TVK: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் விஜயின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள நிலையில், வைகோவும் தமது கருத்தை வெளிப்படுத்தினார். கூட்ட நெரிசல் குறித்து விஜய்க்கு முன்னரே எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், விபத்து நிகழ்ந்ததும் அவர் உடனே சென்னைக்கு திரும்பிச் சென்றது சரியான நடவடிக்கை அல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால் அது மனிதநேயமான செயல் ஆகியிருக்கும் என அவர் விமர்சித்தார்.

மேலும், அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என வைகோ வலியுறுத்தினார். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரசியல் பேரணிகளிலும் சமூகக் கூட்டங்களிலும்  மீண்டும் நடைபெறாமல் இருக்க நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து வைகோ தன்னம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. புதிதாக களமிறங்கும் விஜய் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற வாதம் பொருந்தாது என அவர் உறுதியாக கூறினார்.

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை.. மேயர் விவகாரத்தில் கோட்டை விட்ட திமுக அரசு.. செல்லூர் ராஜு சாடல்!!

கூட்டணி கட்சிகளின் மூலம் விஜய்க்கு தூது அனுப்பிய இபிஎஸ்.. வெட்ட வெளிச்சமாகிய இபிஎஸ்யின் வீக்னஸ்!!