ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

Photo of author

By Madhu

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!

Madhu

தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து பாடத்திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றனர்.

ஆனால் அரசு பள்ளிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது உயர்நிலை பள்ளியின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளனர். தற்போது வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வருகின்றது. ஆனால் இனி காலை 9:45 மணி முதல் மாலை 4:15 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 220 வேலை நாட்கள் வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேரளா அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை கூடுதல் வேலை நாளாக இருக்காது. மேலும் தொடக்கப் பள்ளிகளில் தொடர்ச்சியாக 6 நாட்கள் பள்ளி செயல்படும். மாதத்தில் இரண்டு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருக்கும். 25 சனிக்கிழமை உட்பட 220 பள்ளி நாட்கள் கொண்டதாக புதிய கல்வி நாட்காட்டி கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட 16 சனிக்கிழமை கூடுதலாக இந்த ஆண்டு வேலை நாட்களாக இருக்கின்றது. புதிய கல்வி நாட்காட்டிக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்வி சட்டத்தை பரிசீலிக்காமல் புதிய நாட்காட்டி தயாரித்துள்ளனர் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த புதிய கல்வி நாட்காட்டி தேசிய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த புதிய நாட்காட்டி சற்று அதிர்ச்சி அளித்துள்ளது.