நியாயவிலை கடைகளில் அரிசிக்கு பதிலாக இனி இதுதான் வழங்கப்படும்! தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு!

0
65

கடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமையாளரின் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு அரிசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது 2018 ஆம் வருடத்திலிருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும் உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கேழ்வரகு அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. கொள்முதல் இந்த திட்டத்தினடிப்படையில் நீலகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்ட அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்குப் பதிலாக அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகு மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகு என ஒட்டுமொத்தமாக 1,360 தன் கேழ்வரகு தேவைப்படுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை இந்திய உணவு கழகத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ அதற்கேற்றவாறு கோதுமை ஒதுக்கீட்டை சரிசெய்துகொள்ள முடியும். இது தொடர்பாக இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோதுமைக்கு பதிலாகக் கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு வருவதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில் கோதுமை கிலோவுக்கு 2 ரூபாய் என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்றும், இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

நிர்வாக ஒப்புதல் அவருடைய கருத்துக்களை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது அதனை ஏற்றுக்கொண்டு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் நீலகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில் அரிசிக்கு பதிலாக மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடித் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என கூறப்பட்டுள்ளது.