பெரும் சோகத்தை ஏற்படுத்திய குவைத் தீ விபத்து! முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்! 

0
160
Kuwait fire accident that caused great tragedy! Chief Minister Mukha Stalin's obituary!
Kuwait fire accident that caused great tragedy! Chief Minister Mukha Stalin's obituary!
பெரும் சோகத்தை ஏற்படுத்திய குவைத் தீ விபத்து! முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!
குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் மாங்காப் நகரில் நேற்று(ஜூன்12) இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உடல் கருகு உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முக ஸ்டாலின். அவர்கள் அவருடைய எக்ஸ் தளத்தில் “குவைத் நாட்டின் மங்காப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901″ பதிவிட்டுள்ளார்.