விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?

0
123
Last to apply tomorrow! Have you done that students?
Last to apply tomorrow! Have you done that students?

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?

இந்தியா முழுவதிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற ஒரு தேர்வு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து தான் அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய பல போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு அதை செவி கொடுத்து கூட கேட்கவில்லை.

அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டில் நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து வழிகாட்டு நெறிமுறைகளை, பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையையும் சற்று தாமதமானது.

இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடு முழுவதும், வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை கடந்த ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/இணையதளங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.